நயன்தாரா போல் பெயர் வாங்க வேண்டும்: தேஜஸ்ரீ

மாலை மலர்  மாலை மலர்
நயன்தாரா போல் பெயர் வாங்க வேண்டும்: தேஜஸ்ரீ

விஜய் பாஸ்கர் இயக்கி வரும் ‘அட்டி’ படத்தில் நாயகனாக மா.கா.பா. ஆனந்த்துடன் குத்தாட்டம் போட்டுருப்பவர் தேஜஸ்ரீ. மும்பை மாடல் அழகியான தேஜஸ்ரீ பரத்துடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தேஜஸ்ரீயின் லட்சியம் பற்றி கேட்ட போது....

‘‘தமிழில் நாயகியாக நடிக்க வேண்டும் என்ற கனவோடு மும்பையில் இருந்து தமிழ் நாட்டுக்கு வந்திருக்கிறேன். ஷங்கர், கவுதம் வாசுதேவ்மேனன், ஏ.ஆர்.முருகதாஸ், சுசீந்திரன், வெற்றிமாறன் ஆகியோரின் இயக்கத்திலும் விஷால், ஆர்யா, கார்த்தி, தனுஷ், ஜெயம்ரவி ஆகியோரின் படங்களிலும் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை.

தெலுங்கிலும், இந்தியிலும் படங்களிலும் நடித்து வருகிறேன். என்றாலும் நயன்தாராவைப் போல் படங்களில் நடித்து பெயரெடுக்க ஆசைப்படுகிறேன்.

படங்களில் எனக்கு முக்கிய கேரக்டர் அமைந்தால் அந்த காட்சிக்கு மிகவும் முக்கிய மென்றால் கிளாமராகவும், கவர்ச்சியாகவும், கிளுகிளுப்பாகவும் நடிக்க தயார்.

பெரிய பட்ஜெட், சிறிய பட்ஜெட் என எந்த படமாக இருந்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன்’ என்றார்.

மூலக்கதை