கிராமத்தை தத்தெடுத்து குடிநீர் வசதி செய்த பிரகாஷ் ராஜ்

மாலை மலர்  மாலை மலர்
கிராமத்தை தத்தெடுத்து குடிநீர் வசதி செய்த பிரகாஷ் ராஜ்

கிராமங்களை தத்தெடுத்து, மக்களுக்கு உதவும் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஒரு சில நடிகர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வரிசையில் பிரகாஷ்ராஜ், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒருகிராமத்தை தத்தெடுத்து குடிநீர் வசதி செய்து கொடுத்திருக்கிறார்.

தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகர் அருகில் உள்ள கம்மடனம் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமலும் அடிப்படை வசதிகள் இல்லாமலும் அவதிப்பட்டு வந்தனர். இதை அறிந்த பிரகாஷ் ராஜ் அந்த கிராமத்தை தத்தெடுத்து பல்வேறு அடிப்படை வசதிகளை செய்தார். நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதையடுத்து அந்த கிராமத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஏற்பாடு செய்தார். குழாய் கிணறு அமைத்து மின்சார மோட்டாரையும் பொருத்தினார். இதனால் இந்த கிராம மக்களுக்குந நீண்ட காலமாக இருந்து வந்த குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைத்துள்ளது.

மூலக்கதை