டி 20 போட்டியில் பாகிஸ்தானை வென்றது இந்தியா

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
டி 20 போட்டியில் பாகிஸ்தானை வென்றது இந்தியா

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டி – 20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இந்தப் போட்டிகள் நடப்பதாக இருந்த நிலையில், அங்கு மாலையில் கடுமையாக மழை பெய்ததால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

மாலை 7.30 மணிக்குத் துவங்குவதாக இருந்த ஆட்டம் 8.10க்குத் துவங்கியது.

அதன் பிறகு போட்டிக்கான ஓவர்கள் குறைக்கப்பட்டு, ஒவ்வொரு அணிக்கும் 18 ஓவர்கள் வீச முடிவெடுக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பந்து வீச்சைத் தேர்வுசெய்தார்.

முதலில் பாட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 118 ரன்களைப் பெற்றது.

119 ரன்களை இலக்காகக் கொண்டு களம்இறங்கிய இந்திய அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 15.5 ஓவர்களில் 119 ரன்களை பெற்று இன்றைய போட்டியை தமதாக்கிக் கொண்டது.

விராட் கோலி 55 ரன்களை பெற்றுக்கொடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு பலம் சேர்த்தார்.

T – 20 உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடிய 10 போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது.

மூலக்கதை