சுஷ்மா சுவராஜ் பெப்ரவரி 05 இலங்கை வருகின்றார்; மைத்திரி, சம்பந்தனோடு பேச்சு!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
சுஷ்மா சுவராஜ் பெப்ரவரி 05 இலங்கை வருகின்றார்; மைத்திரி, சம்பந்தனோடு பேச்சு!

Thursday, 28 January 2016 08:33

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். 

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரை அவர் சந்தித்து பேசவுள்ளார்.

இதனிடையே, பெப்ரவரி 06ஆம் திகதி இந்திய நிதியுதவியினால் திருத்தியமைக்கப்பட்ட யாழ். துரையப்பா விளையாட்டரங்கையும் சுஷ்மா சுவராஜ் திறந்து வைக்கவுள்ளார்.

மூலக்கதை