மும்பை வந்துள்ள குலாம் அலி ஆசாத்துக்கு பாதுகாப்பு தீவிரம்!
Wednesday, 27 January 2016 06:11
மும்பை வந்துள்ள பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி ஆசாத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது மகாராஷ்டிர அரசு.
கடந்த முறை இசை கச்சேரி நடத்த குலாம் அலி ஆசாத் மும்பை வந்திருந்த போது, மகாராஷ்டிர சிவசேனா அமைப்பு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. இதை அடுத்து அவர் மும்பையில் இசைக் கச்சேரி நடத்தவில்லை. இந்நிலையில், வருகிற 29ம் திகதி குலாம் அலி பாடி நடித்துள்ள திரைப்படம் மும்பையில் வெளியாக உள்ளது. இதற்காக மும்பை வந்திருக்கும் குலாம் அலி பிரபல விடுதி ஒன்றில் தங்கி உள்ளார்.
விடுதியில் தங்கி இருக்கும் குலாம் அலியின் பாதுகாப்புக்கு மகாராஷ்டிர அரசு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.