தமிழக சட்டசபை தேர்தல்: பா.ம.க.வில் இன்று முதல் விருப்ப மனு

கதிரவன்  கதிரவன்
தமிழக சட்டசபை தேர்தல்: பா.ம.க.வில் இன்று முதல் விருப்ப மனு

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டசபைகளுக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. அத்தேர்தலை எதிர்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி தயாராகி விட்டது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை விரைந்து வெளியிடுவதற்கு வசதியாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. அலுவலகத்தில் இன்று முதல் பிப்ரவரி 5-ந் தேதி வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். மனுவுடன் விண்ணப்ப கட்டணமாக 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.

மனுக்கள் பெறப்பட்ட பின்னர் அவற்றை ஆய்வு செய்து, இரு மாநிலங்களிலும் போட்டியிட விண்ணப்பித்தவர்களை அழைத்து நேர்காணல் நடத்தி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2016-01-27

மூலக்கதை