நம்பகமான விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகள் அவசியம்; இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
நம்பகமான விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகள் அவசியம்; இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்!

Wednesday, 27 January 2016 04:28

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பொறிமுறைகளின் போது வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு அவசியமானது. அதுவே, நம்பகத்தன்னையை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்கத் தூதுவர் கீத் ஹாப்பர் தெரிவித்துள்ளார். 

இலங்கையின் விசாரணைப் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம் என்கிற நிலைப்பாட்டில் அமெரிக்கா எந்த மாற்றத்தையும் செய்யாது என்றும் அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை