368 மில்லியன் ரூபா பெறுமதியான யானைத் தந்தங்கள் அழிப்பு!
Tuesday, 26 January 2016 09:42
368 மில்லியன் ரூபா பெறுமதியான 359 யானைத் தந்தங்களை இலங்கை வனஜீவராசிகள் அமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை காலி முகத்திடலில் வைத்து அழித்தது.
2012ஆம் ஆண்டு சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட இந்த யானைத் தந்தங்கள், இலங்கை அரசின் உடமையாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.