இலங்கை- இந்தியா இடையே சட்டவிரோத உடல் உறுப்பு கடத்தல் நீண்ட காலமாக இடம்பெறுகின்றது: சமன் ரத்னப்பிரிய

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
இலங்கை இந்தியா இடையே சட்டவிரோத உடல் உறுப்பு கடத்தல் நீண்ட காலமாக இடம்பெறுகின்றது: சமன் ரத்னப்பிரிய

Tuesday, 26 January 2016 05:33

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே சட்டவிரோதமாக சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்பு கடத்தல்கள் நீண்ட காலமாக இடம்பெற்று வருவதாக அரச தாதியர் சங்கத் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். 

இவ்வாறான நடவடிக்கைகள் 2013 – 2014ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டதாகவும், அது குறித்து விசாரணை செய்ய ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சமன் ரத்னப்பிரிய இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன், அந்த விசாரணை நடவடிக்கைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், எனினும் இன்று வரை அது தொடர்பிலான விசாரணைகளோ ஆய்வுகளோ இடம்பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு அப்போதைய அரசியல் சூழ்நிலை அல்லது வைத்தியர்களது அழுத்தம் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை