டெல்லியில் 67வது குடியரசு தினவிழா: பிரான்ஸ் அதிபர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
பதிவு செய்த நாள் : 26, ஜனவரி 2016 (10:33 IST)
மாற்றம் செய்த நாள் :26, ஜனவரி 2016 (10:33 IST)
டெல்லியில் 67வது குடியரசு தினவிழா: பிரான்ஸ் அதிபர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
67வது குடியரசு தினவிழா இன்று டெல்லியில் கொண்டாடப்பட்டது. இதில் பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு அளித்தார். பின்னர் 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்றினார்.
பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே வருகையையொட்டி குடியரசு தின அணிவகுப்பில் பிரெஞ்ச் வீரர்களும் பங்கேற்றனர். பிரெஞ்சு ராணுவ இசைக்குழுவுடன் அந்நாட்டு வீரர்கள் அணிவகுப்பில் சென்றனர்.