மக்கள் நல கூட்டணியின் மாநாடு: மதுரையில் இன்று நடைபெறுகிறது

கதிரவன்  கதிரவன்
மக்கள் நல கூட்டணியின் மாநாடு: மதுரையில் இன்று நடைபெறுகிறது

ம.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்கள் நல கூட்டணி சார்பில் மாற்று அரசியல் எழுச்சி மாநாடு இன்று மாலை 5 மணி அளவில் மதுரை, ஒத்தக்கடை புறவழிச் சாலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சீத்தாராம் யெச்சூரி, ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சுதாகர் ரெட்டி, டி.ராஜா, ரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொல்.திருமாவளவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2016-01-26

மூலக்கதை