இன்னும் ரெண்டு வருஷத்துக்கு சொந்தப்படம்தான் - சிவகார்த்திகேயன்

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
இன்னும் ரெண்டு வருஷத்துக்கு சொந்தப்படம்தான்  சிவகார்த்திகேயன்

Tuesday, 19 January 2016 08:22

வருமா, வராதா? வந்தாலும் நல்லாயிருக்குமா, நல்லாயிருக்காதா? ரஜினிமுருகன் படம் குறித்து இப்படி நாலாபுறமும் கேள்விகள் வாட்டி எடுக்க,

தியேட்டர்களின் மனநிலை அப்படியே அதற்கு நேரெதிராக இருந்ததுதான் வியப்பு. தற்போது திரைக்கு வந்த நான்கு படங்களில் அதிக தியேட்டர்களை ஆக்ரமித்த பெருமை ரஜினி முருகனுக்குதான். சுள்ளான் மாதிரி நேற்று வந்த பையன், இப்படி எல்லாருக்கும் சவாலா இருக்காரே என்கிற தனிமனித எரிச்சல் அநேகமாக எல்லா ஹீரோக்களுக்கும் இங்கே வந்துவிட்டது. இப்போது திருப்பதி பிரதர்சிடம் சிக்கி அவர் பட்ட அவஸ்தை போல, யாரையாவது ஒரு வில்லங்க பார்ட்டியை கோர்த்துவிட நாடகம் எழுதி வருகிறார்களாம். இதையெல்லாம் அறிந்தோ, புரிந்தோ வைத்திருக்கும் சிவகார்த்திகேயன், இன்னும் ரெண்டு வருஷத்துக்கு சொந்தப்படத்தில் மட்டும் நடிப்பது என்று முடிவெடுத்திருக்கிறாராம். வலையில் சிக்க அவர் என்ன விலங்கா? விலாங்கு!

ரஜினி முருகன் விமர்சனம்

மூலக்கதை