‘ஆரோக்கிய வாழ்விற்கான உடற்பயிற்சி’ செயற்திட்டம் மைத்திரி தலைமையில் ஆரம்பம்!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
‘ஆரோக்கிய வாழ்விற்கான உடற்பயிற்சி’ செயற்திட்டம் மைத்திரி தலைமையில் ஆரம்பம்!

Monday, 25 January 2016 09:11

விளையாட்டுத்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஆரோக்கிய வாழ்விற்கான உடற்பயிற்சி’ வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்ச்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை ஜனாதிபதி செயலக வளவில் இடம்பெற்றது. 

தொற்றா நோயினை குறைக்கும் ஒரு நடவடிக்கையாக ஒவ்வொரு நாள் காலையிலும் ஆகக் குறைந்தது ஒரு சில விநாடிகள் முறையான அங்க அசைவுகளுடன் உடற்பயிற்சியில் ஈடுபடும் பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இக்கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.ஹரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் திரு.பி.பீ.அபேகோன், ஜனாதிபதி அலுவலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

மூலக்கதை