பிரபல நடிகை திடீர் மரணம்

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 25, ஜனவரி 2016 (10:47 IST)

மாற்றம் செய்த நாள் :25, ஜனவரி 2016 (10:47 IST)

பிரபல நடிகை திடீர் மரணம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் நடிகை கல்பனா. மலையாள பட உலகில் திக் விஜயம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். 1983–ல் பிரபல மலையாள கதாசிரியர் வாசுதேவ நாயரின் மஞ்சு (மூடுபனி) என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிறகு பிரபலமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். கல்பனாவின் சகோதரிகள் நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனி.

ஞாயிற்றுக்கிழமை ஒரு சினிமா பட சூட்டிங்கிற்காக நடிகை கல்பனா ஐதராபாத் சென்றார். அங்குள்ள ஒரு ஓட்டலில் அவரும், படக்குழுவினரும் தங்கியிருந்தனர். இன்று அதிகாலை நடிகை கல்பனா அவரது அறையில் மயங்கி கிடந்தார். படக்குழுவினர் அவரை மீட்டு அங்குள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார். அவர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. 

கல்பனாவின் உடல் இன்று விமானம் மூலம் ஐதராபாத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு அவருக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

மூலக்கதை