தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவியுங்கள்; மைத்திரியிடம் ஜெனீபன் வேண்டுகோள்!
Monday, 25 January 2016 04:08
நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், அண்மையில் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையைான ஜெனீபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றை திறந்து வைப்பதற்கான நேற்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த ஜனாதிபதியைச் சந்தித்த போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அத்தோடு, தன்னை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்தமைக்கு ஜெனீபன் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்தந் சந்திப்பின் போது, ஜெனீபனின் பெற்றோரும் உடனிருந்தனர்.