நடிகர் சங்கத்தின் குருதட்சணை முகாம்!

நக்கீரன்  நக்கீரன்
நடிகர் சங்கத்தின் குருதட்சணை முகாம்!

நடிகர் சங்கத்தின் குருதட்சணை முகாம்!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாண்டவர் அணியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குருதட்சனை திட்டம் கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி நடிகர் சிவகுமார் துவக்கி வைத்தார். தமிழகமெங்கும் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கலைத்திறன் , குடும்பம் பற்றிய முழுவிவரங்களையும் சேகரித்து பதிவு செய்து அவர்களுக்கு தேவையான மருத்துவ , கல்வி மற்றும் இதர உதவிகளை மேற்கொள்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.


அதன் விவரங்களை சேகரித்து பதிவு செய்ய இரண்டு நாள் முகாம் ஜனவரி 9 ,1௦ தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் துவங்கியது . பதினோறு மையங்களில் சங்க அலுவலக நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மேற்ப்பார்வையில் நடைபெற்ற இந்த இரண்டு நாள் முகாம் பற்றிய விபரங்கள் வருமாறு. கோவை , திருப்பூர் , நீலகிரி மாவட்ட உறுப்பினர்களுக்கான முகாம் சங்க மேலாளர் பாலமுருகன் , நடிகர் அயூப் கான் மேற்பார்வையில் கோவையில் நடைபெற்றது . சேலம் , தர்மபுரி மாவட்ட முகாம் நடிகை கோவை சரளா மேற்பார்வையில் சேலத்திலும் , நாமக்கல் மாவட்ட முகாம். 

நடிகர் நந்தா மேற்பார்வையில் நாமக்கலிலும், கரூர் , திண்டுக்கல் மாவட்ட முகாம் நடிகர் விக்னேஷ் மேற்பார்வையில் கரூரிலும் , காரைக்குடி , சிவகங்கை மாவட்ட முகாம் நடிகை ராதா மேற்பார்வையிலும் , புதுக்கோட்டை மாவட்ட முகாம் நடிகர் ஆரி மேற்பார்வையில் புதுக்கோட்டையிலும் ,திருச்சி, பெரம்பலூர் மாவட்ட முகாம் நடிகர் ஹேமசந்திரன் மேற்பார்வையில் அரியலூரிலும் , நாகை மாவட்ட முகாம் நடிகர் பசுபதி மேற்பார்வையில் தஞ்சாவூரிலும் , புதுச்சேரி , விழுப்புரம் , கடலூர் மாவட்ட முகாம் நடிகர் மனோபாலா மேற்பார்வையில் புதுச்சேரியிலும் , மதுரை , விருதுநகர் , தேனி , ராமநாதபுரம் மாவட்ட முகாம் நடிகர் உதயா மேற்பார்வையில் மதுரையிலும் , வேலூர் , திருவண்ணாமலை மாவட்ட முகாம் நடிகர் பிரேம் மேற்பார்வையில் ஆரணியிலும் , திருவள்ளூர் , காஞ்சீபுரம் மாவட்ட முகாம்.

 நடிகை சோனியா மேரபார்வையில் ஸ்ரீபெரம்பத்தூரிலும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.உள்ளது. நடிகர் சங்க மாவட்ட நிர்வாகிகளும் நியமன உறுப்பினர்களும் முகாம் ஒருங்கினைப்பாளர்களாக சிறப்பாக செயல்பட்டு வெற்றிகரமாக பணியாற்றி முகாமை நிறைவு செய்து திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் இம்முகாமின்  மீதமுள்ள பணி அதுவும் கூடிய விரைவில் நிறைவடைந்துவிடும் என்று தென்னிந்திய நடிகர் சங்க செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை