தனுஷுக்கு வந்த சங்கடம்
Tuesday, 12 January 2016 09:52
நுங்கம்பாக்கத்தில் தனுஷின் அலுவலகம் இருக்கும் பில்டிங் முன்னாள் மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலத்திற்கு சொந்தமானது.
சமீபத்தில் நடைபெற்ற வெள்ள நிவாரண பணியின் போது அங்கு குவிக்கப்பட்ட பொருட்களும், விநியோகித்த முறையும், வெளியூர்களுக்கு அனுப்ப வாகனங்கள் நின்ற கோலமும், பக்கத்து பக்கத்து ஆபிஸ்களில் இருந்தவர்களுக்கு பெரும் எரிச்சலை தர, டெல்லிக்கு போன் அடித்துவிட்டார்கள். அங்குதான் இருக்கிறாராம் லலிதா குமார மங்கலம். அதற்கப்புறம் அவர் இவர்களை கூப்பிட்டு விசாரித்ததாக தகவல். தனுஷ் அலுவலக வட்டாரம் என்ன சொல்கிறது? இப்படி தனுஷ் சார் முன் வந்து சேவையில் இறங்கறதை கேள்விப்பட்டுதான் டெல்லியிலிருந்து மேடம் போன் பண்ணினாங்க. அவங்களே அவரை நிறைய பாராட்டுனாங்க. இங்கு சுற்றியிருக்கிற யாருக்கும் எந்த சங்கடமும் இல்ல. யாரோ தப்பா போட்டுக் கொடுத்துருக்காங்க (அட மேடத்துக்கிட்ட இல்ல. நம்மகிட்ட) என்கிறது மேற்படி வட்டாரம். நாலு பேருக்கு நல்லது செஞ்சா மூணு பேரு முள்ளால குத்துறதுதான் நம்ம ஊர்ல வாடிக்கையாச்சே, விடுங்க தனுஷ்!