ஐ.பி.எல்.: சுந்தர்ராமன் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கு போதிய ஆதாரம் இல்லை: லோதா கமிட்டி அறிக்கை

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 4, ஜனவரி 2016 (17:46 IST)

மாற்றம் செய்த நாள் :4, ஜனவரி 2016 (17:46 IST)

ஐ.பி.எல்.: சுந்தர்ராமன் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கு போதிய ஆதாரம் இல்லை: லோதா கமிட்டி அறிக்கை

ஐபிஎல் முன்னாள் செயல் அதிகாரி சுந்தர்ராமன் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று சூதாட்டம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் லோதா கமிட்டி தெரிவித்துள்ளது.

பிசிசிஐயின் சீர்திருத்தங்கள் கொண்டுவருவது தொடர்பான தனது அறிக்கையை லோதா கமிட்டி உச்சநீதிமன்றத்தில் இன்று சமர்பித்தது. இந்த அறிக்கையில் ஒரு பகுதியாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎல் முன்னாள் செயல் அதிகாரி சுந்தர்ராமனுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் சுந்தர்ராமன் ஐபிஎல் பணிகளில் அமர்த்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின்றன. 

மூலக்கதை