சிம்பு அப்பா பாடும் சிவபுராணம்
Monday, 04 January 2016 07:56
தன் மகன் சிம்புவுக்கு எதிராக வழக்கு போட்ட ஒவ்வொரு கட்சித் தலைமைக்கும் போன் போட்டு பேசி வருகிறார் டி.ராஜேந்தர்.
“என்ன சார்... ஊர்ல யாரும் பண்ணாததையா பண்ணிட்டான் என் புள்ள? அதுக்கு போயி கோர்ட்டு கேஸ்னு போயிட்டீங்களே?” என்று அவர் கேட்பதை, காதார கேட்டு உடனடியாக ஆக்ஷனிலும் இறங்கிவிடுகிறார்கள் அவர்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் தொடர்ந்த இரு வழக்குகள் வாபஸ் ஆகிவிட்டன. பா.ம.க பிரமுகரால் போடப்பட்ட வழக்கும் வாபஸ் ஆகிவிட்டது. காஞ்சிபுரம் சென்று வழக்கறுத்தீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றுவிட்டு வந்த பின்புதான் இத்தனை மாற்றம் என்று சிவபுராணம் பாடி வருகிறார் டி.ஆர். நடுவில் நடந்ததுதான் பெரும் கொடுமை. சிம்பு நடித்து விரைவில் வெளிவருதாக இருந்த ‘இது நம்ம ஆளு’ படத்தை ராமநாராயணன் மகன் முரளியின் தேனான்டாள் பிலிம்ஸ்தான் வாங்கி வெளியிட முன் வந்தது. தற்போது அந்த எண்ணத்தை ஒரேயடியாக அழித்துவிட்டதாம். அதுக்கென்ன? டி.ஆருக்கு ஒரு படமெடுத்தான் ஈஸ்வரர் ஆலயம் தென்படாமலா போய்விடும்?