ராதிகா ஆப்தே: கவர்ச்சியுடன் குத்துப் பாட்டுக்கு ஆடும் நாயகி அல்ல நான்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ராதிகா ஆப்தே: கவர்ச்சியுடன் குத்துப் பாட்டுக்கு ஆடும் நாயகி அல்ல நான்

திரைச்செய்தி Sunday, January 3rd, 2016

ராதிகா ஆப்தே

‘டோனி’, ‘வெற்றிச் செல்வன்’ படங்களில் குடும்பப் பாங்கான பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்த ராதிகா ஆப்தேவை யாரும் கண்டுகொள்ளவில்லை. பாலிவுட் பக்கம் சென்றவர் குறும்படம் ஒன்றில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆண், பெண் உறவு பற்றிப் பகிரங்கமாகக் கருத்து வெளியிட்டார்.

இதையடுத்து பரபரப்பாகப் பேசப்பட்டார். அதையடுத்து இந்தி, தெலுங்குப் படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளைக் கைப்பற்றியவர் தமிழில் ரஜினி ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடிக்கிறார். தற்போது அவரது கால்‌ஷீட்டுக்கு பலரும் காத்திருக்கின்றனர்.

ஹீரோயின்கள் குத்துப் பாடலுக்கு ஆடுவதுபற்றி கருத்து கேட்டபோது சூடாக பதில் அளித்தார். “ஐட்டம் சாங்’ எனப்படும் குத்துப்பாடல் இப்போதெல்லாம் அங்கங்களை கவர்ச்சியாகக் காட்டி ஆடும் பாடல் என அர்த்தமாகி விட்டது. அப்படி கவர்ச்சி காட்டி நடிக்கும் நடிகைகளைப் போல் நான் ஒருபோதும் நடிக்கத் தயாரில்லை. அதேசமயம் உணர்வுபூர்வமான பாடல், அதற்கான காரணம் பொருத்தமாக இருந்தால் அப்படி நடிப்பதைத் தவிர்க்கமாட்டேன்,” என்றார்.

தமன்னா, ஸ்ரேயா, ஸ்ருதி ஹாசன் தொடங்கி பல நடிகைகள் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார்கள். அவர்களை ஒட்டு மொத்தமாக ராதிகா ஆப்தே தாக்கியிருக்கிறார் என்று கோலிவுட்டில் சிலர் விமர்சிக்கின்றனர்.

மூலக்கதை