இலங்கை கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற இந்திய மீனவர்கள் தயாராக இல்லை: எச்.ராஜா பேட்டி
பதிவு செய்த நாள் : 9, ஜனவரி 2016 (17:56 IST)
மாற்றம் செய்த நாள் :9, ஜனவரி 2016 (17:56 IST)
இலங்கை கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற இந்திய மீனவர்கள் தயாராக இல்லை: எச்.ராஜா பேட்டி
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மீனவர் பிரச்சனையில் இலங்கை அரசு கேட்கும் இரண்டு கேள்விகளுக்கு பதில் கூற இந்திய மீனவர்கள் தயாராக இல்லை.
1. இலங்கையில் வாழும் தமிழ் மீனவர்கள் எல்லைக்குள் வராமல் மீன் பிடிக்க முடியுமா? இந்திய மீனவர்கள் இங்கு வந்து மீன் பிடித்தால் நாங்கள் எங்கு செல்வது? 2. இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள போட்டுகளை இந்திய மீனவர்கள் பயன்படுத்துவதை நிறுத்த முடியுமா? இந்த 2 கேள்விகளுக்கும் பதில் கிடைத்தால் மீனவர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றார்.
ஜெ.டி.ஆர்.