மனைவியைப் பாராட்டிய செல்வராகவன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மனைவியைப் பாராட்டிய செல்வராகவன்

திரைச்செய்தி Monday, December 28th, 2015

கீதாஞ்சலி, செல்வராகவன்

பிரபல இயக்குநர் செல்வராகவன் எழுத்தில் அவருடைய மனைவி கீதாஞ்சலி இயக்கியுள்ள படம் 'மாலை நேரத்து மயக்கம்'. இப்படம் ஆங்கிலப் புத்தாண்டு நாளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், அண்மையில் இப்படத்தின் செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது தனது மனைவியை வெகுவாகப் பாராட்டினார் செல்வராகவன்.

''சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால் இதேபோன்றொரு செய்தியாளர்கள் சந்திப்பில் இரண்டு அறிமுக இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அது நானும் என்னுடைய தம்பியும் நாயகனுமான தனுஷும்தான்.

நீங்கள்தான் எங்களைப் பெற்றோருக்குப் பின் கவனமாக வழிநடத்திச் சென்றீர்கள். அதேபோல் முதன்முறையாக படத்தை உருவாக்கி இருக்கும் இந்தப் புதிய குழுவுக்கும் ஆதரவு அளித்து வழிநடத்த வேண்டும். 'மாலை நேரத்து மயக்கம்' படக்குழுவுக்கு உங்களுடைய ஆதரவு நிச்சயம் தேவை.

''எனக்குப் இப்படம் உண்மையாகவே புதுமையான அனுபவத்தைத் தந்துள்ளது. நான் ஆண் இயக்குநராக இருந்து பெண்களின் உணர்வுகளைப் பற்றிய படங்களை இயக்கினேன். இப்படத்தில் பெண் இயக்குநராக இருந்து என் மனைவி கீதாஞ்சலி ஆண்களைப் பற்றிய படத்தை இயக்கியுள்ளார்.

''வீட்டில் இருந்தபடி எங்களது குழந்தைகள் கவனித்துக்கொண்டு, இப்படத்தின் இயக்குநர் என்ற வகையில் கீதாஞ்சலியை படப்பிடிப்புத் தளத்திற்கு அனுப்புவது நிச்சயம் புதுவித அனுபவமாகத்தான் இருந்தது. அவர் படப்பிடிப்புக்குச் சென்றாலும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை குழந்தைகளைப் பற்றி விசாரித்துக் கெர்ணடே இருப்பார்,'' என்றார் செல்வராகவன்.

மூலக்கதை