சுயமாக முடிவெடுக்கும் தீபிகா

தமிழ் முரசு  தமிழ் முரசு
சுயமாக முடிவெடுக்கும் தீபிகா

திரைச்செய்தி Sunday, December 27th, 2015

தீபிகா

வாழ்க்கையில் எந்த முடிவையும் பிறரது பேச்சைக் கேட்டு எடுக்க மாட்டேன் என்கிறார் தீபிகா படுகோனே. அவர் நடிப்பில் அண்மையில் வெளியான ‘பாஜிராவ் மஸ்தானி’ படம் வசூலில் நூறு கோடியை எட்டிப்பிடித்துள்ளதாம். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், 2015ஆம் ஆண்டு தமக்குச் சிறப்பான ஒன்றாக அமைந்தது எனக் கூறியுள்ளார்.

“நான் எந்த படத்தில் நடித்தாலும், இயக்குநர் கதையை சொல்லும்போது அது எனக்குப் பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பேன். வேறு யார் பேச்சையும் கேட்க மாட்டேன். நான்தான் இறுதி முடிவு எடுப்பேன். பிறர் முடிவுகளை நம்பி ஏற்க மாட்டேன். “நான் நடிக்கும் படங்களின் வசூல் எவ்வளவு என்று மட்டும் நான் பார்ப்பது இல்லை.

ஒரு படம் எத்தனை கோடிகளை வசூலிக்கிறது என்பதை வைத்து அதன் வெற்றியை முடிவு செய்வது வருத்தம் அளிக்கிறது. நல்ல கதையும் தரமும்தான் ஒரு படத்துக்கு முக்கியம். “என தங்கை என் படங்களைப் பற்றி வெட்டு ஒன்று துண்டு இரண்டு என விமர்சிப்பார். அது எனக்குப் பிடிக்கும்,” என்கிறார் தீபிகா படுகோனே.

மூலக்கதை