ஓடும் விமானத்தில் பிரான்ஸ் பயணிகள் ரகளையில்...

NEWSONEWS  NEWSONEWS
ஓடும் விமானத்தில் பிரான்ஸ் பயணிகள் ரகளையில்...

பக்ரைன் விமான நிலையத்தில் இருந்து பாரீசுக்கு கடந்த 28ம் தேதி கல்ப் ஏர் விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் பிரான்ஸ் நாட்டு பயணிகள் 5 பேர் பயணித்தனர்.

புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் பிரான்ஸ் பயணிகள் 3 பேர் ரகளையில் ஈடுபட்டனர். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு, வன்முறையில் இறங்கினர். இதை குழந்தைகளுடன் பயணம் செய்த மற்ற பயணிகள் கண்டித்தனர். ஆனால், இவர்கள் கேட்பதாக தெரியவில்லை. இதனால், கோபமடைந்த விமான ஓட்டி வானத்தில் வட்டமிட்டு பக்ரைன் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினார். கலாட்டா செய்த பிரான்ஸ் பயணிகள் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மூலக்கதை