‘கதகளி’ உண்மைக் கதை
திரைச்செய்தி Saturday, January 2nd, 2016
விஷால் நடிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவர இருக்கும் படம் ‘கதகளி’. தன்னுடைய நண்பனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து இந்தப் படத்தை எடுத்ததாக செய்தியாளர் சந்திப்பில் கூறினார் இயக்குநர் பாண்டியராஜ்.படம் பற்றி பாண்டியராஜ் கூறுகையில், “படத்தின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த பிறகு இந்தப் படம் உங்கள் படம்போல் இல்லையே என்று கேட்கின்றனர். இந்தப் படத்தின் கதை என் நண்பனின் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவங்களைக் கோர்வையாக வைத்து எடுக்கப்பட்டது. படத்தில் 140 கிலோ எடையுடைய வில்லனுடன் சண்டையிடும் காட்சியில் விஷால் தானே நடிப்பதாகக் கூறி அவருடன் 6 நாட்கள் சண்டைக் காட்சியில் நடித்திருந்தார்.
அவருக்குப் பதில் வேறு ஓர் ஆளைப் போட்டு படம் எடுக்கலாம் என்று கூறினேன். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. அந்தக் காட்சி பின்னி மில்லில் பிரம்மாண்டமாக அரங்கம் அமைத்து எடுக்கப்பட்டது. விஷாலுக்கு இந்தப் படம் நிச்சயம் புதிய பரிமாணத்தைக் கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை,” என்றார்.