சிம்பு வழக்குகள் மீட்பு
திரைச்செய்தி Friday, January 1st, 2016
அனிருத் இசையில் நடிகர் சிம்பு பாடிய ‘பீப்’ பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்களை இழிவாகச் சித்திரித்துப் பாடியதாக இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையில் மூன்று வழக்குகள் தொடுக்கப் பட்டன. சிம்பு, அனிருத்தின் பாடல்கள் இணையத்தில் பரப்பப்பட்ட சம்பவத்தை அரசியலாக்கும் முயற்சியில் இறங்கின அரசியல் கட்சிகள். கடைசியில் அக்கட்சிகள் யாவும் சிம்பு மீது தொடர்ந்த வழக்குகளை மீட்டுக்கொண்டன.பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒரு வழக்கும், விடுதலை சிறுத்தை சார்பில் 2 வழக்குகளும் தொடரப் பட்டன. இதில் பா.ம.க. தொடர்ந்த வழக்கு ஏற்கெனவே மீட்டுக்கொள்ளப்பட்டுவிட்டது. விடுதலை சிறுத்தை தென்சென்னை மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வழக்குரைஞர் காசி தொடர்ந்த வழக்கு புதன்கிழமை விசாரிக்கப்பட்டது. அப்போது வழக்குரைஞர் காசி முன்னிலையாகி, தான் தொடர்ந்த வழக்கை மீட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.
இதேபோல கே.கே.நகர் பகுதி விடுதலை சிறுத்தை செயலாளர் புதியவன், தொடர்ந்த வழக்கும் நேற்று மீட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து அந்த வழக்கும் வாபஸ் பெறப்பட்டன. சிம்பு, அனிருத் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட 3 வழக்குகளும் மீட்டுக்கொள்ளப்பட்டன.