சட்டப்படி சந்திப்பேன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சட்டப்படி சந்திப்பேன்

திரைச்செய்தி சரத்குமார் Wednesday, December 30th, 2015

சரத்குமார்

நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாகத் தேர்வானவர்களின் சுறுசுறுப்பான செயல்பாட்டிற்குப் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சங்கம் தொடர்பான முக்கிய கணக்கு வழக்குகளை முன்னாள் தலைவர் சரத்குமார் ஒப்படைக்கவில்லை எனக் குற்றம்சாட்டி உள்ளார் நடிகர் விஷால்.

கணக்குகளை ஒப்படைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சங்கத்தின் புதிய பொருளாளர் கார்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விளக்கங்களை அளிக்க இருப்பதாக சரத்குமார் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சிப் பணிக்காக அங்கு வந்திருப்பதாகவும் சென்னை திரும்பியதும் நடிகர் சங்க கணக்கு வழக்குகள், சங்க கட்டட ஒப்பந்தம் ரத்து பொய் என்ற குற்றச்சாட்டு ஆகியவை குறித்து விளக்கம் அளிக்க இருப்பதாகத் தெரிவித்தார்.

மூலக்கதை