இந்தியாவுடனான கிரிக்கெட் போட்டிகள் குறித்த முடிவை பாகிஸ்தான் இன்று அறிவிக்கிறது

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
இந்தியாவுடனான கிரிக்கெட் போட்டிகள் குறித்த முடிவை பாகிஸ்தான் இன்று அறிவிக்கிறது

Monday, 14 December 2015 08:16

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டித்தொடர்கள் நடத்துவதுக் குறித்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவிக்க உள்ளது.

2015ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை இந்தியா-பாகிஸ்தான் இடையே 6 கிரிக்கெட் போட்டித் தொடர்களை நடத்துவது என்கிற புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த வருடத்தில் போடப்பட்டது.இந்த போட்டிகளின் முதல் போட்டித் தொடரை அரபு அமீரக நாடுகளில் நடத்தலாம் என்று இரு நாடுகளும் முடிவெடுத்த நிலையில், இந்த முதல் போட்டித் தொடரை இலங்கையில் நடத்த சர்வதேச கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்தது. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், பாகிஸ்தான் அரசும் இதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில்,இந்தியா தரப்பில் இன்னமும் மவுனம் நீடித்து வருகிறது.

இந்திய கிரிக்கெட் வாரியம் இப்போட்டிகளை நடத்தத் தயார் நிலையில் உள்ள நிலையில் இந்திய அரசிடமிருந்து இதற்கு இன்னமும் ஒப்புதல் வரவில்லை. இதுக்குறித்து இரண்டு நாட்களுக்குள் இந்திய அரசு அறிவிக்காவிட்டால், இந்தியாவுடனான கிரிக்கெட் போட்டிகளைக் கைவிடுவதுக் குறித்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்த நிலையில், இரண்டு நாள் கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ளது. எனவே, இதுக்குறித்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவிக்கும் என்று எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

மூலக்கதை