இலங்கை – நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை அணி நிதான ஆட்டம்

கதிரவன்  கதிரவன்
இலங்கை – நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை அணி நிதான ஆட்டம்

இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டுனெடினில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி தொடக்க நாளில் 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்கள் சேர்த்தது. 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது.

சிறிது நேரத்திலேயே எஞ்சிய 2 விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 96.1 ஓவர்களில் 431 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை நிதானமாக விளையாடிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 81 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 197 ரன்கள் எடுத்துள்ளது.

கருணாரத்னே 84 ரன்களும், சன்டிமால் 83 ரன்களும் (208 பந்து, நாட்-அவுட்) எடுத்தனர். 3-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

2015-12-12

மூலக்கதை