இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது சிறந்தது:சச்சின்

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
இந்தியாபாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது சிறந்தது:சச்சின்

Wednesday, 04 November 2015 08:11

இரு நாட்டு நல்லுறவுக்காக இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதே சிறந்தது என்று கிரிக்கெட் முன்னாள் பிரபல நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செய்தியாளர்களை சந்தித்த சச்சின், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே திட்டமிட்டபடி டிசம்பர் மாதத்தில் கிரிக்கெட் போட்டிகளைத் தொடங்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று கூறியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதில் அப்படி ஒன்றும் சிரமம் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதோடு இரு நாட்டு நல்லுறவுகள் மேம்பட இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதே சிறந்தது என்பதுதான் எனது எண்ணம் என்றும் அவர் கூறியுள்ளார்.இந்தியா-பாகிஸ்தான் இடையே அரபு அமீரக நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் தொடரை நடத்தை இரு நாடுகள் முடிவு செய்துள்ள நிலையில், இதற்கான பேச்சுவார்த்தை பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

 

மூலக்கதை