இருபதுக்கு20 உலகக் கிண்ணப் போட்டிகளை புறக்கணிப்போம்: பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம்

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
இருபதுக்கு20 உலகக் கிண்ணப் போட்டிகளை புறக்கணிப்போம்: பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம்

Monday, 26 October 2015 17:37

பாகிஸ்தானுடனான கிரிக்கெட் விளையாட்டுத் தொடர் குறித்து இந்தியா யோசிக்காவிடில், பாகிஸ்தான் 20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகளைப் புறக்கணிக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

2016ம் ஆண்டு இந்தியாவில் 20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைப்பெற உள்ளன.இந்நிலையில் அடுத்த இரு ஆண்டுகளுக்கு அரபு அமீரக நாடுகளில் இந்தியா-பாகிஸ்தான் பங்கேற்கும் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டித் தொடர் குறித்து பாகிஸ்தான் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தும், இரண்டு முறையும் இந்தப் பேச்சுவார்த்தை நடைப்பெறவில்லை. எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறித் தொடர் தாக்குதலை நடத்தி வருவதால்தான் இந்தத் தடை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் குறித்து இந்தியா ஆலோசித்து நல்ல முடிவெடுக்காமல் விட்டால், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள 20 ஓவர் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் பாகிஸ்தான் பங்கேற்காமல் போட்டியைப் புறக்கணிக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் கூறியுள்ளார்.

மூலக்கதை