ஐசிசி சேர்மேன் ஸ்ரீனிவாசனை நீக்கத் திட்டம்!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
ஐசிசி சேர்மேன் ஸ்ரீனிவாசனை நீக்கத் திட்டம்!

Monday, 02 November 2015 10:01

ஐசிசி சேர்மேனாக இருக்கும் ஸ்ரீனிவாசனை நீக்கத் திட்டமிடப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிசிசிஐ செயலாளர் அனிதா தாகூர் இதுக்குறித்துக் கூறுகையில், வரவிருக்கும் நவம்பர் மாதம் 9ம் திகதி பிசிசிஐ கூட்டம் நடைப்பெற உள்ளது என்றும், அப்போது பிசிசிஐயில் ரவிசாஸ்திரிக்கு வழங்கப்படும் பொறுப்பு, வர்ணனையாளர்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக நவம்பர் மாதம் 8ம் திகதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இரண்டு அணிகள் புதிதாக இணையவிருப்பதுக் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்றும் கூறியுள்ள அனிதா தாகூர், தற்போது ஐசிசி சேர்மேனாக இருக்கும் ஸ்ரீனிவாசனை நீக்கிவிட்டு, அப்பதவிக்கு பிசிசிஐ தலைவராக இருக்கும் ஷஷாங் மனோகரையே நியமிக்க குழு முடிவெடுக்கும் என்றும் மேலும் கூறினார்.

மூலக்கதை