சச்சின் அறிவு திறமையை பயன்படுத்தி இருந்தால் இன்னும் புகழ் சேர்த்திருக்கலாம் - கபில்

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
சச்சின் அறிவு திறமையை பயன்படுத்தி இருந்தால் இன்னும் புகழ் சேர்த்திருக்கலாம்  கபில்

Friday, 30 October 2015 04:57

சச்சின் தமது அறிவு, திறமையை பயன்படுத்தி கிரிக்கெட் விளையாடி இருந்தால் இரட்டை சதம், மூன்று சதம் என்று அடித்திருக்கலாம் என்று, முன்னால் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கூறியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றுக்காக துபாய் சென்றுள்ள கபில்தேவ், அங்கு ஒரு ஆங்கில நாளிதழுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அந்த நேர்காணலில், சச்சின் ஈவு இரக்கமற்ற அதிரடி ஆட்டத்தை தமது முதிர்ச்சி காலத்திலாவது ஆடி இருக்க வேண்டும் என்றும், வீரேந்திர ஷேவாக் போல களத்தில் இறங்கினால் அதிரடியாக ரன்கள் குவிக்கும் முயற்சியில் சச்சின் ஒரு போதும் ஈடுபடவில்லை என்றும் கூறியுள்ளார்.

அவர் எப்போதும் ஒரு சதம் அடிப்பதிலேயே குறியாக விளையாடி இருக்கிறார் என்றும், அவரது அறிவு, திறமை, அனுபவம் இவற்றை உபயோகப்படுத்தி முறையாக விளையாடி இருந்தால் இரட்டைசதம், முச்சதம் என்று கூட அடித்திருக்கலாம் என்றும், இன்னும் இதைவிட பேரும் புகழும் அடைந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார் கபில். அதுமட்டுமின்றி அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு தமக்குக் கிடைத்திருந்தால் சச்சினுக்கு நல்ல அறிவுரை கூறி, அவரை மேலும் புகழடைய வைத்திருப்பேன் என்றும் கபில்தேவ் தமது நேர்காணலில் கூறியுள்ளார்.

 

மூலக்கதை