வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் வேறு அணிக்காக தோனி விளையாட முடிவு

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் வேறு அணிக்காக தோனி விளையாட முடிவு

Saturday, 24 October 2015 08:21

வரவிருக்கும் 9 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வேறு அணிக்காக தோனி விளையாட முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

கடந்த 8 ஆண்டுகளாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தவர் மகேந்திர சிங் தோனி. ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட புகார் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணி அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.இதையடுத்து இந்த இரண்டு அணிகளில் உள்ள வீரர்கள் எந்த அணிக்காக விளையாடுவார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஐபிஎல் அணிகளுக்கு மேலும் இரண்டு புதிய அணிகள் உருவாகவும் உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தோனி எந்த அணியில் விளையாடுவார், அல்லது இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்காமல் இருப்பாரா என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. இந்நிலையில்தான் நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தோனி சந்தித்தார்.அப்போது அவரிடம் ஐபிஎல் போட்டிகளில் வேறு அணிக்காக விளையாட தாம் முடிவு எடுத்துள்ளதுக் குறித்துத் தெரிவித்ததாகவும், ஸ்ரீனிவாசனும் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மூலக்கதை