அதிகாலை நேரங்களில் 59 வீடுகளுக்குள் புகுந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவர் மனைவியுடன் கைது

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
அதிகாலை நேரங்களில் 59 வீடுகளுக்குள் புகுந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவர் மனைவியுடன் கைது

கனடாவில் உள்ள central Etobicoke பகுதியில் கடந்த மூன்று வருடங்களில் 59 வீடுகளில் புகுந்து அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்தை செய்த மர்ம மனிதன் ஒருவனை Etobicoke போலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

டொரண்டோவை சேர்ந்த 32 வயதான Anieph Fitzroy Burton என்ற நபர், மீது 95 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 11 பிரிவுகள் பாலியல் பலாத்காரம் சம்பந்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் செய்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த இவருடைய 31 வயது மனைவி Jehanneiry Beaton, அவர்களும் கைது செய்யப்பட்டு அவர் மீது ஆறுவித பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Anieph Fitzroy Burton பெரும்பாலும் தனது குற்றங்களை அதிகாலை நேரத்தில்தான் செய்துள்ளதாகவும், மேலும் அவர் Bloor Street, The Queensway , Royal York Road போன்ற பகுதியில்தான் அதிகளவு குற்றங்களை செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மூலக்கதை