கனடாவில் 3 போலீஸ் அதிகாரிகளை சுட்டுக்கொன்ற மர்மமனிதன்

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
கனடாவில் 3 போலீஸ் அதிகாரிகளை சுட்டுக்கொன்ற மர்மமனிதன்

கனடாவில் 3 போலீஸ் அதிகாரிகளை மர்மமனிதன் சுட்டுக் கொலை செய்துள்ளான்.

கனடாவின் கிழக்கு கடற்கரை மாகாணமான நியூ புரூன்ஸ்விக்கில் உள்ளது மான்க்டன் நகரம். இங்கு ராணுவ உடை அணிந்து வந்த மர்மமனிதன் திடீரென போலீஸ் அதிகாரிகள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 போலீஸ் அதிகாரிகள் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய மர்மமனிதரை போலீசார் தேடி வருகிறார்கள். ராணுவ உடை அணிந்து வந்த மர்மமனிதனின் போட்டோவை வெளியிட்டு அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மூலக்கதை