இந்திய-பஹ்ரைன் கலாச்சார உறவு: மோடி பெருமிதம்
மனாமா: பிரான்ஸ்,ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, முதற்கட்டமாக, பிரான்ஸ் சென்றார். அந்நாட்டு அதிபர் மேக்ரோன் ஆகியோரை சந்தித்து, இரு தரப்பு விவகாரங்கள் குறித்து பேசினார்.
பின்னர் ஐக்கிய அரபு எமிரட்ஸ் சென்று அபுதாபி வந்தடைந்தார். அங்கு அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நஹ்யானை சந்தித்து இரு தரப்பு உறவு, வர்த்தகம், இரு தரப்பு நலன் சார்ந்த சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான 'ஆர்டர் ஆப் ஜாயீத்'' என்ற விருது மோடிக்கு வழங்கப்பட்டது.
இரு நாடுகள் பயணத்தை முடித்த மோடி இன்று பஹ்ரைன் சென்றடைந்தார். மனாமா நகர் அரண்மணையில் பக்ரைன் இளவரசர் கலிபா பின் சல்மானை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து பேசினார். பின்னர் கலிபா பின் சல்மான் அளித்த விருந்தில் மோடி பங்கேற்றார்.
பி்ன்னர் பக்ரைன்வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியது, இந்தியாவிற்கும், பஹ்ரைனுக்கும் வரலாற்று ரீதியில் கலாச்சார உறவு உண்டு. இந்தியாவில் ஏழை மக்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கப்பட்டுவருகிறது. அனைவருக்கும் இணைய தள வசதி மொபைல் போன் வசதி கிடைக்கிறது. முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை எட்டுவோம்.
இந்தியாவில் டிஜிட்டல் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் இது ஏற்றக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் மூலம் பணப்பரிமாற்றம் மிகச்சிறப்பாக நடக்கிறது.