மஞ்சு வாரியர் பத்திரமாக மீட்பு

தினமலர்  தினமலர்
மஞ்சு வாரியர் பத்திரமாக மீட்பு

இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கும் அதைத்தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மலையாள படமொன்றின் படப்பிடிப்பிற்காக மலையாள நடிகை மஞ்சுவாரியார் உட்பட பல தொழில்நுட்ப கலைஞர்கள் இமாச்சல் சென்றபோது சிக்கி கொண்டனர்.

இந்த நிலையில் சாட்டிலைட் போன் மூலமாக கேரளாவிலுள்ள தனது தம்பி மது வாரியரை தொடர்பு கொண்டு, தாங்கள் இருக்கும் இடத்தில் வெறும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே உணவு இருக்கும் இக்கட்டான சூழலில் இருப்பதாக தகவல் தெரிவித்தார் மஞ்சு வாரியார்.

இதையடுத்து அந்த தகவல் கேரள அரசிற்கு தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து இமாச்சல பிரதேச முதல்வருக்கு படக்குழுவினரை பத்திரமாக மீட்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தநிலையில் மஞ்சு வாரியர் உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் அந்த பகுதியில் உள்ள மொத்தம் 200க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை