மனித உரிமை கவுன்சிலில் முறையிட பாக்., முடிவு
இஸ்லாமாபாத்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு, சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு, 370, சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே, பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து, ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில், முறையிடப் போவதாக, பாக்., வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர், முகமது பைசல் தெரிவித்தார்.