3 விமான படை வீரர்கள் பலி

தினகரன்  தினகரன்
3 விமான படை வீரர்கள் பலி

பார்மர்: ராஜஸ்தானில் விமானப்படை வீரர்கள் வந்த லாரி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். ராஜஸ்தானின் சவுஹாடன் நகரில் உள்ள விமான படை மையத்தில் இருந்து 8 வீரர்கள் லாரி ஒன்றில் வந்து கொண்டிருந்தனர். பார்மர் மாவட்டத்தில் லாரி வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமான படை வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேரில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மூலக்கதை