பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி போலீசில் புகார்

தினமலர்  தினமலர்
பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி போலீசில் புகார்

சென்னை: தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மதுமிதா மிரட்டுவதாக போலீசில் விஜய் டிவி நிர்வாகம் புகார் அளித்துள்ளது.

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் காமெடி நடிகை மதுமிதா. 50 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்த அவர், கடந்த வாரம் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். டாஸ்க் ஒன்றில் ஏற்பட்ட சண்டையால், தன் கையை தானே அறுத்துக் கொண்டார் மது. இது பிக்பாஸ் விதிகளுக்கு முரண்பட்டது என்பதால் அவர் நிகழ்ச்சியில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார்.

வெளியே வந்த மதுவிடம் பேசிய சிலர் சொன்ன தகவலின்படி, கர்நாடக காவிரி பிரிச்சினை தொடர்பாக மது கருத்து கூறியது தான் பிரச்சினைக்கு காரணம் என தெரியவந்தது.

இந்நிலையில் மதுமிதா மீது விஜய் டிவி சார்பில் கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரில், மதுமிதா அதிக சம்பளம் கேட்டு தங்களுக்கு தொடர் டார்ச்சர் கொடுப்பதாகவும், தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை