ம.பி. மாஜி முதல்வர் மரணம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ம.பி. மாஜி முதல்வர் மரணம்

போபால்: மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் பாபுலால் கவுர்  இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் பாபுலால் கவுர் (89)  இன்று காலை மாரடைப்பால்  காலமானார்.   இவர் 1930ம் ஆண்டு  உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பிரதாப்கர் என்ற இடத்தில்  பிறந்தார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் மூத்த  தலைவராக விளங்கினார். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான அவர் கடந்த 2004ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  முதல் 2005ம் ஆண்டு நவம்பர் வரை முதலமைச்சராக பதவி வகித்தவர்.



கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல்  இருந்து சிகிச்சை பெற்று வந்த  நிலையில்,  அவர் கடந்த 7ம்தேதி போபால் நகரில் உள்ள நர்மதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.    சிகிச்சை பெற்று வந்த இவர்  இன்று காலை திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

கடந்த 2018ம் ஆண்டு வயது முதிர்வால் அரசியலில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.

.

மூலக்கதை