காஷ்மீர் விவகாரம்; பாக்., புது முடிவு

தினமலர்  தினமலர்
காஷ்மீர் விவகாரம்; பாக்., புது முடிவு

இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரம் குறித்து, சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.


காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான, சட்டப்பிரிவு 370, சமீபத்தில், மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தியாவுடனான அனைத்து உறவுகளையும் பாக்., துண்டித்தது. இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே, பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.,வுக்கு கொண்டு சென்ற பாகிஸ்தானுக்கு அங்கு மூக்குடைப்பே மிஞ்சியது. இந்நிலையில், இந்த விவகாரத்தை, சர்வதேச நீதிமன்றத்தில், முறையிட போவதாக, பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர், ஷா மெஹ்மூத் குரேஷி, தெரிவித்துள்ளார். தனியார் டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இதனை அவர் தெரிவித்தார்.

மூலக்கதை