பிரேசிலில் பஸ்சை கடத்தியவர் சுட்டுக் கொலை
ரியோ டி ஜெனிரோ: தென் அமெரிக்க நாடான, பிரேசிலின், ரியோ டி ஜெனிரோ நகரில் இருந்து, 37 பயணியரை ஏற்றி சென்ற பேருந்தை, துப்பாக்கி முனையில் ஒருவர் கடத்தினார். பேருந்தில் இருந்த, நான்கு பெண்கள் உட்பட, ஆறு பேரை மட்டும் விடுவித்துவிட்டு, மீதி, 31 பேரை, பிணைக் கைதிகளாக வைத்துக் கொண்டு, மிரட்டல் விடுத்தார். பேருந்தை சுற்றி வளைத்த போலீசார், கடத்தல்காரரை, சுட்டுக் கொன்று, பயணியரை மீட்டனர். கடத்தல்காரர் விடுத்த கோரிக்கை குறித்து, தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.