ஹபீஸ் சயீத் நீதிமன்றத்தில் மனு

தினமலர்  தினமலர்

லாகூர்:மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, பாக்.,கை சேர்ந்த ஜமாத் - உத் - தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர், ஹபீஸ் சயீத், மூளையாக செயல்பட்டார். இவர், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்ததற்காக, கடந்த ஜூலை மாதம், பாக்.,கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து, ஹபீஸ் சயீத் உட்பட, 67 பேர், லாகூர் உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

மூலக்கதை