திமுக எம்பி மீது அவதூறு வழக்கு

தினகரன்  தினகரன்

சேலம்: சேலம் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் தனசேகரன், சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்  கடந்த ஜூன் 6ம்தேதி சேலத்தில் மேம்பாலம் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது திமுக எம்பி பார்த்திபன், 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக முதல்வர் மீது அவதூறாக பேசியுள்ளார். அவர் மீது மானநஷ்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கூறியுள்ளார். இம்மனு 5ம்தேதி விசாரணைக்கு வருகிறது.

மூலக்கதை