75% கல்லீரல் பாதிப்பு அமிதாப் உருக்கம்

தினகரன்  தினகரன்
75% கல்லீரல் பாதிப்பு அமிதாப் உருக்கம்

மும்பை: உடல் பரிசோதனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் அமிதாப் பச்சன் கூறியதாவது:உடல் நிலை பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம் தேவை. அலட்சியம் நம்மை பாதுகாக்காது. அதற்கு உதாரணமாக என்னைப் பற்றியே நான் சொல்வேன். எனக்கு காசநோய் பாதிப்பு இருந்தது. அது 8 வருடம் கழித்துதான் எனக்கே  தெரிந்தது. உரிய சிகிச்சையால் நான் குணம் அடைந்தேன். இப்போது கல்லீரல் 75% பாதித்துவிட்டது.தவறான ரத்தத்தால் இப்படி ஆகிவிட்டது. உடல் நிலையில் எப்போதும் கவனத்துடன் இருப்பவன் நான். எனக்கே இப்படி நடந்திருக்கிறது.  அதனால் மருத்துவ பரிசோதனைக்கு நம்மை தயார்படுத்திக்கொண்டு உடலை கண்காணிக்க வேண்டும் என்றார்.

மூலக்கதை