சுற்றுலா அழைத்து செல்வதாக மோசடி டிராவல்ஸ் ஏஜென்ட் கைது

தினகரன்  தினகரன்
சுற்றுலா அழைத்து செல்வதாக மோசடி டிராவல்ஸ் ஏஜென்ட் கைது

அண்ணாநகர்: சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் பாலாஜி (48). பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமைந்தகரையில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவர், ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி ₹3 ஆயிரம் வீதம் 77  பேரிடம் கட்டணம் வசூலித்துள்ளார். ஆனால், குறிப்பிட்ட தேதியில் சுற்றுலா அழைத்து செல்லவில்லை. இதனால், பணம் செலுத்தி ஏமார்ந்த பெரியமேட்டை சேர்ந்த லட்சுமி (50). என்பவர் இதுபற்றி அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜியை கைது செய்து விசாரித்தனர். அதில் பாலாஜி பண  மோசடியில் ஈடுப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பாலாஜியை கைது செய்து  சிறையில் அடைத்தனர். மேலும் இவர் 2016-ம் ஆண்டு ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி பண மோசடியில் கைது செய்யப்பட்டவர் என்பது  குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை