அமெரிக்க பாதுகாப்பு அமைச்சருடன் தொலைபேசியில் ராஜ்நாத் சிங் பேச்சு

தினகரன்  தினகரன்
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சருடன் தொலைபேசியில் ராஜ்நாத் சிங் பேச்சு

புதுடெல்லி:  அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் டி எஸ்பருடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேசினார்.பிரதமர் மோடி காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்புடன் நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினார். இந்த நிலையில் நேற்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் டி எஸ்பருடன் தொலைபேசியில் பேசினார். இது  குறித்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள்  கூறுகையில், ‘‘காஷ்மீர் பிரச்னை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவித்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர், காஷ்மீரில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்துக்கு பாராட்டும் தெரிவித்தார். இந்தியா - பாக். இடையேயான பிரச்னை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கமுடியும் எனநம்பிக்கை தெரிவித்தார்’’ என்றனர்.

மூலக்கதை