விவசாயிகள் கருத்தரங்கம் 28ல் நடத்துகிறது தி.மு.க.,

தினமலர்  தினமலர்
விவசாயிகள் கருத்தரங்கம் 28ல் நடத்துகிறது தி.மு.க.,

சென்னை:'தஞ்சாவூரில், வரும், 28ம் தேதி, காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம் நடைபெறும்' என, தி.மு.க., அறிவித்துள்ளது.

தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:மத்திய, மாநில அரசுகளின் அலட்சித்தால், ஏழாண்டுகளுக்கும் மேலாக, காவிரி டெல்டா பகுதிகள், வறண்டு கொண்டிருக்கின்றன. தொடர்ந்து, குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளது. மேட்டூர் அணை, உரிய நேரத்தில், பாசனத்திற்கு திறந்து விடப்படாததாலும், தமிழகத்தின் நெற்களஞ்சியத்தில், விவசாயமும், விவசாய தொழில்களும் முழுமையாக நலிவடைந்து விட்டன.

அதனால், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும், பிற மாநிலங்களுக்கு வேலை தேடி செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த அவலநிலையை போக்க, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 28ம் தேதி, தஞ்சாவூரில், கட்சி தலைவர், ஸ்டாலின் தலைமையில், காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம் நடக்க உள்ளது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை